சென்னை :பால்வளத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோட்டில் பால்வளத்துறை சார்பில் ரூ.2.14 கோடியில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கையும் திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.