ராணுவ பள்ளியில் பயிற்சி ராணுவ அதிகாரி மாயம்

மாவ்: மத்திய பிரதேசம் மாவ் பகுதியில் உள்ள ராணுவ காலாட்படை பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த லெப்டினென்ட் மோகித் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை மாயமானார். பயிற்சி பெறும் அதிகாரிகள் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு உடற்பயிற்சி மைதானத்தில் ஆஜராக வேண்டும். அனைவரும் வெள்ளியன்று ஆஜரான நிலையில் மோகித் குப்தா அங்கு இல்லை என்று தெரிய வந்தது.

அவரது அறையில் உள்ளாரா என்று பார்த்ததில் அங்கும் அவர் இல்லை. அவரது செல்போனுக்கு போன் செய்தபோது அது ‘ஸ்விட்ச்ஆப்’ செய்யப்பட்டிருந்தது. பயிற்சி பள்ளி பொறுப்பாளர் சுபேதார் ஜர்மல் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் மாவ் போலீசார் வழக்கு பதிந்து மோகித் குப்தாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Related posts

டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

கள்ளக்குறிச்சி உயிரிழப்பை வைத்து கபட நாடகமாடுகிறார் எடப்பாடி: கருணாஸ் தாக்கு

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு