இதனால் கடன் தொகைக்கான வட்டி தொகையும் அதிகரித்துள்ளது. கடன் தொல்லையால் மனமுடைந்த குணபிரியன், யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விடுதி உரிமையாளர் கொடுத்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் அங்கு விரைந்து சென்று குணப்பிரியன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், கடன் தொல்லையால் குணபிரியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.