இந்நிலையில், வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு அறிவிப்பை டிவிஎஸ் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் இருசக்கர வாகனங்களை அருகே உள்ள பழுதுபார்க்கும் நிலையத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 18ம் தேதி வரை வெள்ளத்தில் சேதமான இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளது. பழுதுபார்க்கும் நிலையங்களில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் முழுமையாக பரிசோதிக்கப்படும் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், என்ஜின் சேதாரத்தை தவிர்க்க, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனத்தை எக்காரணம் கொண்டு ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் அறிவுறுத்தியுள்ளது.