அரசு மட்டும் அல்ல; தன்னார்வ நிறுவனங்களும் உற்றுழி உதவுதல் என்ற முறையில், உதவிக் கரத்தை நீட்டவேண்டும் என்ற கடமை உணர்ச்சியோடும், மனிதநேயத்துடனும், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்”, “பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்” என்கிற அறக்கட்டளை அமைப்புகளின் சார்பிலும், “பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள்” சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி இன்று வழங்கினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலிபூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.