இந்நிலையில், வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில் படகில் சென்று சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பைபர் படகில் சென்று மக்களுக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி, குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்க 160 நடமாடும் மருத்துவ மையங்கள் இயங்கி வருகின்றன. மழைநீர் முழுமையாக வடிந்த பிறகு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்படும். ஏ.ஜி.எஸ். காலனி, டான்சி நகரில் மீட்புப் பணிகளுக்காக 20 படகுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் தேவைப்படும் மக்களுக்கு படகு மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் மேலும் வடிந்த பிறகு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.