மிக்ஜாம் புயல் பாதிப்பு; சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

சென்னை: சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள் , ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில் டிச.13ம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும்.

புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரையான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் நான்கு மாவட்டங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; 160 வாகனங்கள் சென்னையில் இயங்கி வருகிறது. 6,421 முகாம்கள் மூலம் 4 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்டுள்ள 7 வார முகாம்களில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இன்னும் 3 வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு