காஞ்சிபுரம்: மிக்ஜாம் புயல் எச்சரிக்கையை ஒட்டி, 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு காஞ்சிபுரம் வந்துள்ளனர். தலா 25 பேர் கொண்ட 2 குழுக்கள் மாங்காடு பகுதியிலும், காஞ்சிபுரம் பகுதியிலும் தயார் நிலையில் உள்ளன என்று தகவல் தெரிவித்துள்ளனர். பெங்களூருவிலிருந்து 25 பேர், அரக்கோணத்திலிருந்து 25 பேர் என 50 பேர் கொண்ட குழு தயார் நிலையில் நிறுத்திவைப்பு.