சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பினை சீர்செய்திடவும் நிவாரண பணி மேற்கொள்ளவும் நிதி வழங்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கலாம். வழங்கப்படும் நிதியுதவிக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80ன் கீழ் 100 சதவீதம் வரிவிலக்கு உண்டு எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.