கமலாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே, சமக கட்சியின் நிர்வாகி இளஞ்செழியன் கட்சியை இணைப்பதற்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டிருந்தார். நாக்கை துருத்தி கோபமாக கத்தினார். அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். ‘சரத்குமார் தலைவனா இருக்குறதுக்கே தகுதி இல்லாத ஆள்..’ என்று அப்போதும் கத்திக்கொண்டிருந்தார்.
அவரிடம், ‘நள்ளிரவில் மனைவியிடம் கேட்டு பாஜவில் கட்சியை இணைத்ததாக சரத்குமார் சொல்கிறாரே..’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘‘நான் என் மனைவியைக் கேட்காமல் சமகவில் இணைந்து செயல்பட்டது தப்பா போச்சு..’ என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டார்.