மிட் நைட் 2 மணி தலைவன் எண்ணமும்… தொண்டனின் எண்ணமும்…சரத்குமாருக்கு இப்படி ஒரு நிலைமையா?

பாஜவுடன் கூட்டணி சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், 2 நாளில் கட்சியை பாஜவில் நேற்று இணைத்து கொண்டார். இந்த இணைப்பு குறித்து பேசிய சரத்குமார், ‘‘நள்ளிரவு 2 மணி இருக்கும்… அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி எனக்கு பாஜவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர், ‘நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன்’ என்றார்’’ என கூறினார்.

கமலாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே, சமக கட்சியின் நிர்வாகி இளஞ்செழியன் கட்சியை இணைப்பதற்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டிருந்தார். நாக்கை துருத்தி கோபமாக கத்தினார். அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். ‘சரத்குமார் தலைவனா இருக்குறதுக்கே தகுதி இல்லாத ஆள்..’ என்று அப்போதும் கத்திக்கொண்டிருந்தார்.

அவரிடம், ‘நள்ளிரவில் மனைவியிடம் கேட்டு பாஜவில் கட்சியை இணைத்ததாக சரத்குமார் சொல்கிறாரே..’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘‘நான் என் மனைவியைக் கேட்காமல் சமகவில் இணைந்து செயல்பட்டது தப்பா போச்சு..’ என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு