நடுரோட்டில் கால் மேல் கால் போட்டு ஹாயாக வீட்டில் படுத்திருப்பதுபோல படுத்திருந்தார். இரவு நேரம் என்பதால், சாலையில் அவர் படுத்திருப்பது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. அப்போது இடைப்பாடியில் இருந்து, மேட்டூர் சென்ற டேங்கர் லாரி, நடுரோட்டில் படுத்திருந்த சங்கர் மீது ஏறியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து டேங்கர் லாரி டிரைவரான பவானி அம்மாபேட்டையை சேர்ந்த மாதையன்(50) என்பவரை கைது செ்யதனர். டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்தனர். போதையில் நடுரோட்டில் படுத்திருக்கும் சங்கர் தலை மீது டேங்கர் லாரி ஏறிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.