விமானங்கள் வழக்கமான வழிசெலுத்துதல் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. அவை செயற்கை கோள் சமிக்ஞைகளின் உதவியின்றி ஒரு விமானத்தின் நிலையை கணக்கிட முடியும். கடந்த சில மாதங்களில் மத்திய கிழக்கு வான்வெளி பகுதியில் ஜிபிஎஸ் சிக்னலில் கோளாறு,சிக்னல் நெரிசல் ஏற்படுவதாக விமானிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விசாரிக்க கடந்த மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜிஎன்எஸ்எஸ் அமைப்பில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அந்த குழு விரிவாக ஆலோசனை நடத்தியது. விமான சிக்னல் குறுக்கீடுகள் மற்றும் கோளாறுகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது குறித்து பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.