சென்னை : மைக்ரோசாஃப்ட் நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS என்ற திட்டத்தை 100 பள்ளிகளுக்கு விரிவுபடுத்த முடிவு எடுத்துள்ளது. திட்டத்தின் மூலம் எதிர்கால ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு ஏற்றார்போல் மாணவர்களை மேம்படுத்த முடியும். ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் பற்றி அடிப்படை பாடங்கள் கற்றுத் தரப்படும்.