சென்னை : “விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்கிறோம்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாத நிலை நீடிக்கிறது. உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் அனைவர்க்கும் கிடைப்பதை உறுதிசெய்ய, களத்தில் பலரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்கிறோம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.