எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி ஓபிஎஸ் அஞ்சலி செலுத்துகிறார்

சென்னை: எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 24ம் தேதி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 24ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணிக்கு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு