சென்னை: எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 24ம் தேதி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 24ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணிக்கு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.