மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியை தாண்டியது

சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தாண்டியது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 7 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 64,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் 37.எம்.சி. தண்ணீர் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேட்டூர் அணைக்கு 6 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது.

Related posts

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு