இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 13,939 கன அடியில் இருந்து 13,104 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 29.06 டி.எம்.சி. ஆக உள்ளது.