மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தது உபரிநீர் திறப்பால் வெள்ள எச்சரிக்கை

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியதால், 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் அங்குள்ள அணைகளில் இருந்து, உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் மாலை 24,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 20,505 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை, மீண்டும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

மேட்டூர் அணை நிரம்பியதால், கடந்த 7ம் தேதி மூடப்பட்ட உபரிநீர் போக்கி மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டது. உபரிநீர் கால்வாய் வழியாக விநாடிக்கு 13,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு 21,500 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், தண்ணீர் திறப்பை அதிகரிக்க தயார் நிலையில் பணியாளர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதையொட்டி காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உறுதி!!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 975 புள்ளி உயர்ந்து 84,160-ல் வர்த்தகம்

இலங்கை அதிபருக்கான தேர்தலில் நாளை வாக்குப்பதிவு: முதன் முறையாக 38 வேட்பாளர்களுடன் சுமார் 2அடி நீளம் கொண்ட வாக்குசீட்டு தயாரிப்பு!