இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அலுவலகத்தில் சந்தித்து கேட்டால் தன்னை மிரட்டுவதற்காக சிசிடிவி காட்சிகளை தயார் செய்து புகார் அளிக்க திட்டமிடுவதாக கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் புகார் தெரிவித்தார். ஏற்கனவே, மேட்டுப்பாளையம் நகராட்சியின் ஆணையாளராக பணியாற்றி பணி மாறுதலாகி சென்ற ஆணையர், கவுன்சிலர்கள் அனைவரும் முட்டாள்கள் என பேசி எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை பெற ரூ.10 லட்சம் பணம் பெற்றுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், இதற்கு அதிகாரிகள் என்ன செய்ய போகிறீர்கள் எனவும் கேள்வி கேட்டார். திமுக கவுன்சிலரின் இந்த பேச்சைக்கேட்டு எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்களும் கூட கைதட்டி வரவேற்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.