மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

பூந்தமல்லி: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மாநகர காவல் வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு நிபுணர்கள் டிடெக்டர் மற்றும் பாதுகாப்பு உடையுடன், வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் கருவி மற்றும் மோப்பநாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரயில்நிலையம் முழுவதும் 1 மணி நேரம் தீவிர சோதனை நடத்தியதில், அங்கு எந்தவித மர்ம பொருளும் சிக்கவில்லை. இதனையடுத்து இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. மேலும் இமெயில் மூலம் மிரட்டல் விட்ட மர்ம ஆசாமி யார் என்பதை சென்னை மாநகர போலீசார் சென்னை சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தேடி வருகின்றனர். இதனால் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு

தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்