இந்நிலையில், மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப டெண்டர் வெளியிட்டுள்ளார். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டென்டர்கள் வரவேற்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்க டெபாசிட்டாக ரூ.25 லட்சம் செலுத்தவும், இந்த ஒப்பந்த படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 28ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்த புள்ளிகள் அன்றைய தினமே மாலை 3 மணிக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களை தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களை தனியார் வசம் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து போக்குவரத்து கழக ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.