மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

ஆலந்தூர்: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மாநகர காவல் வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு நிபுணர்கள் டிடெக்டர் மற்றும் பாதுகாப்பு உடையுடன், வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் கருவி மற்றும் மோப்பநாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் ரயில்நிலையம் முழுவதும் 1 மணி நேரம் தீவிர சோதனை நடத்தியதில், அங்கு எந்தவித மர்ம பொருளும் சிக்கவில்லை.  இதனையடுத்து இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. மேலும் இமெயில் மூலம் மிரட்டல் விட்ட மர்ம ஆசாமி யார் என்பதை சென்னை மாநகர போலீசார் சென்னை சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தேடி வருகின்றனர். இதனால் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு