Sunday, July 7, 2024
Home » மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

by Ranjith

ஆலந்தூர்: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மாநகர காவல் வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு நிபுணர்கள் டிடெக்டர் மற்றும் பாதுகாப்பு உடையுடன், வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் கருவி மற்றும் மோப்பநாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் ரயில்நிலையம் முழுவதும் 1 மணி நேரம் தீவிர சோதனை நடத்தியதில், அங்கு எந்தவித மர்ம பொருளும் சிக்கவில்லை.  இதனையடுத்து இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. மேலும் இமெயில் மூலம் மிரட்டல் விட்ட மர்ம ஆசாமி யார் என்பதை சென்னை மாநகர போலீசார் சென்னை சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தேடி வருகின்றனர். இதனால் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

4 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi