மரக்காணம்: மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் மெத்தனால் ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ் பாய்ந்தது. மெத்தனால் ஆலை உரிமையாளர் இளையநம்பி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரி சாராய வியாபாரிகள் ராஜா, ஏழுமலை ஆகியோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.