ஏன் நான் சொல்றனா வரும் காலம் இதை விட மோசமாக இருக்கும். இதை விட பெரும் வெள்ளம் வரும், பெரும் புயல் வரும். பெரும் சூறாவளி வரும். கடுமையான வறட்சியும் இடையில் வரும். அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நமது வானிலை அப்டேட்டாக இருக்க வேண்டும். உலக தர வானிலை அறிக்கை இங்கு இருக்கணும். பொத்தம் பொதுவாக இந்த மாவட்டத்தில் இந்த மாவட்டத்தில் மழை பெய்யும், இதுல கனமழை பெய்யும், அதுல லேசான மழை பெய்யும், இங்கு காற்று வரும். காற்றோட கலந்தது.. அதெல்லாம் வேண்டாம். கரெக்டா சொல்லுங்க. தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வளவு செ.மீ மழை பெய்யும்னு சொல்லுங்க. வெளிநாட்டில சொல்றாங்கல… ஏன் உங்களால் சொல்ல முடியல.. அந்த ஆதங்கம் எனக்கு தவிர, அந்த மையத்தை கொச்சப்படுத்த வேண்டும் என்று எண்ணம் எனக்கு இல்லை. உலகத்தில் பல நாடுகளில் வந்த முன்னேற்றம் இங்கு வரணும் நான் பார்க்கிறேன். வானிலை ஆய்வு மையம் துல்லியமா அறிவிச்சாங்க என்றால் உயிர் சேதம் மற்றும் உடமைகளை காப்பாற்றலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.