வாட்ஸ்அப், இன்ஸ்டா, பேஸ்புக்கில் பயன்படுத்த ‘மெட்டா ஏஐ’ இந்தியாவில் அறிமுகம்


புதுடெல்லி: இந்தியாவில் மெட்டா ஏஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாவில் பயனர்கள் படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான மெட்டா ஏஐ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர் பயனர்கள் மெட்டா ஏஐ சாட்பாட்டை பயன்படுத்த முடியும். இந்த வசதி தற்போது குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்டாலும், வரும் காலங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் நுட்பம் ஏஐ மாடலான லாமா 3 தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தேர்தல் நடந்ததால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை