கடற்படை வீரர்கள் வந்ததும் கடத்தல்காரர்கள் அனைவரும் தப்பியது தெரியவந்தது. அவர்கள் சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்களாக இருக்கலாம் எனவும், கடத்தல் தகவல் கிடைத்தவுடன் சில மணி நேரங்களில் கடல்சார் ரோந்து விமானம் லீலா நோர்போக் கப்பல் இருக்கும் பகுதியை சென்றடைந்து, அதன் மீது பறந்தபடி கண்காணித்த போதே இரவு நேரத்தில் அவர்கள் தப்பியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடற்கொள்ளையர்களை கடற்படை தீவிரமாக தேடி வருகிறது. இதற்காக அரபிக்கடலில் சந்தேகத்திற்கு இடமான கப்பல்களை கடற்படை ரோந்து கப்பல்கள் ஆய்வு செய்து வருகின்றன. தற்போது லீலாநோர்போக் கப்பலில் உள்ள சில பழுதுகளை சரிசெய்யும் பணி நடக்கிறது.