ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசிரேகாவுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தாயை மகளே தூக்கிச் சென்ற விவகாரத்தில் விளக்கம் கேட்டு வெங்கடேஷ், சசிரேகா ஆகியோருக்கு மாவட்ட சுகாதார இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் மெமோ அனுப்பியுள்ளார்.