டெல்லியில் இன்று பாஜவின் தேசிய கவுன்சில் கூட்டம் 11,500 உறுப்பினர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகின்றது. இந்த கூட்டத்தை கட்சியின் தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைக்கிறார். பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டமானது சமீபநாட்களாக நாடு முழுவதும் இருந்து வந்து பங்கேற்கும் பாஜ பிரதிநிதிகளின் மிகப்பெரிய கூட்டமாக இருக்கும். இந்த கூட்டத்தில் மாநில முதல்வர், மாநில அமைச்சர்கள், மாநில கட்சி தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் முதல் கட்சியின் மாவட்ட தலைவர்கள் என சுமார் 11,500 உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

கட்சியின் மாவட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடு முழுவதும் உள்ள மோர்ச்சா பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 2014 மற்றும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டங்களில் சுமார் 3000 பேர் மட்டுமே பங்கேற்றனர். முதல் முறையாக சுமார் 11,500 பேர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முசிறி அருகே 2 பேரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி போலீசில் சரண்

வேட்டவலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசியில் விதை திருவிழா 200 காய்கறி விதைகளை காட்சிப்படுத்திய விவசாயிகள்