மேலூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

மேலூர்: மேலூர் அருகே விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டு வனப் பகுதியில் விட்டப்பட்டது. மேலூர் அருகே உள்ள பட்டிஅடைக்கன்பட்டியில் வசிக்கும் நடராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று மாலை இரை தேடி வந்த புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் மேலூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு பணி குழுவினர் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை உயிருடன் மீட்டனர். பின்னர் மதுரை வனவர் மூர்த்தி மற்றும் மீட்புபணி குழுவினர்கள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் அந்த புள்ளிமானை விடுவித்தனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது