இடாநகர்: அருணாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 50 பேரவை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு மேகாலயாவின் ஆளும் தேசிய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் அருணாச்சலபிரதேசத்தின் லாங்டிங் மாவட்டம் அருகே நடந்த பிரசாரத்தில் கலந்து கொள்ள மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா சென்றிருந்தார்.
கான்ராட் சங்மாவின் கான்வாயை பின்தொடர்ந்து தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு வாகனமும் சென்றது. கானுபாரி சோதனை சாவடியில் சோதனை பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்தின் வாகனத்தை தடுத்து சோதனையிட்டனர். அப்போது அதிலிருந்து ரூ.1 கோடிைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.