பெங்களூரு : காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பம் அளித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரியது கர்நாடகம். விண்ணப்பத்தை பரிசீலிக்க தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கர்நாடக அரசு விண்ணப்பத்தில் தகவல் அளித்துள்ளது.