என்னை சந்திக்க வேண்டுமா?.. ஆதார் ஆட்டை காட்டாயம் கொண்டு வரவேண்டும்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் நிபந்தனை..!!

டெல்லி: என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என பாஜக எம்.பி., கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார். இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 74,755 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அனைவரும் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என நிபந்தனையை கங்கனா விதித்துள்ளார். நேற்று மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த தொகுதி எம்.பி. கங்கனா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்; நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வழியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சிப்பேன். நான் மண்டியில் இருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். மேலும், தனது தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம்; மேலும் தன்னை சந்திப்பதற்கான காரணத்தை காகிதத்தில் எழுதிக் கொண்டு வர வேண்டும். ‘எனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் சந்திக்க விரும்பவில்லை’ என்பதால் இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

 

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி