அதிலும், மக்களின் உயிரை காப்பாற்றக்கூடிய மருத்துவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. முதலில் தாக்கினார்கள், கொலைமிரட்டல் விடுத்தார்கள், தற்போது நேரடியாக கொலை செய்வதில் இறங்கியுள்ளார்.
இது தொடர்ந்து நீடித்தால் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அறவே இருக்காது என இதனை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொல்கத்தாவில் கொல்லப்பட்ட மேற்குவங்க மாணவி கொலைக்கு கண்டனம் தெரிவித்து உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பதாகையை கையில் ஏந்தியவாறு அந்த மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என கோஷமிட்டபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.