மதுரை: மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்த கொசு ஒழிப்பு பணியாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மரவனூரைச் சேர்ந்த கலையரசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தந்தை அர்ஜூனன் மனு அளித்திருந்தார்.