மருத்துவக் கல்லூரிக்கு ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர் உடல் தானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் நிர்வாகியான ஆர்.சேகர் மனைவியின் தாயார் தவமணி(80) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் பகுதியில் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான தவமணி தன்னுடைய இறப்பிற்கு பிறகு அவரது உடலை புதைத்தோ அல்லது எரித்தோ வீணாக்காமல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்விக்காக வழங்க முடிவு செய்தார்.

அதன்படி போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளிக்க விரும்பினார். இதனைத் தொடர்ந்து அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் வழிகாட்டுதலின் பேரில், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை கண்காணிப்பாளரும், முதுநிலை மருத்துவருமான மல்லிகேசன் என்பவரிடம் உடல் தானம் செய்வதற்கான உறுதிமொழி சான்றிதழ் படிவத்தை உறவினர் வி.சுதாகர் முன்னிலையில் சாட்சிகளுடன் கையெழுத்திட்டு வழங்கினார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்