கல்பாக்கம் அருகே பைக் மீது பஸ் மோதி ஏசி மெக்கானிக் பலி

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த வாயலூர் பெரிய காலனியை சேர்ந்தவர் பெருமாள் (32). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் ஏசி மெக்கானிக்கான ஜெயசீலன் (31). இவர்கள், இருவரும் நேற்று முன்தினம் மாலை தங்களது வீட்டிலிருந்து ஒரே பைக்கில் ஆயப்பாக்கம் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, இசிஆர் சாலையை கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசுப் பேருந்து இவர்களது பைக் மீது மோதியது.

மேலும், கட்டுப்பாடை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ் எதிரே வந்த கார் மீதும் மோதி, அங்கிருந்த ஒரு வீட்டை உரசியபடி நின்றது. இதில், பலத்த காயமடைந்த பெருமாள் மற்றும் ஜெயசீலன் ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஜெயசீலன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சதுரங்கப்பட்டினர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு