கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், பிளேஸ்பாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சைத்தூன் உத்தரவின்படி, கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. உதவி இயக்குனர் பாஸ்கர் மேற்பார்வையில், டாக்டர் சரவணகுமார் தலைமை வகித்தார். முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில், ஊராட்சி மன்ற தலைவர் அருணா யுவராஜ், ஆம்புலன்ஸ் மருத்துவர் செந்தில் அமுதன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் குணசேகரன், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது