தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்: துரை வைகோ

சென்னை: தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக போட்டியிட விரும்பும் 6 தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாகவும், விருதுநகர், திருச்சி, ஈரோடு, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சி ஆகிய 6 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து பணிகளை தொடங்கி உள்ளோம் எனவும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 6 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளோம் எனவும் துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும் எங்களின் விருப்பத்தை கூட்டணியின் தலைவரான முதலமைச்சர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு