சென்னை பள்ளிகளில் பணிபுரிந்து பணி நிறைவு பெறவிருக்கும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் மேயர் பிரியா..!

சென்னை: சென்னை பள்ளிகளில் பணிபுரிந்து பணி நிறைவு பெறவிருக்கும் ஆசிரியர்களுக்கு மேயர் ஆர்.பிரியா நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பணிபுரிந்து 2022-23ஆம் கல்வியாண்டில் பணிநிறைவடைந்த மற்றும் பணி நிறைவு பெறவிருக்கும் உதவிக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோருக்கு பணிநிறைவு பாராட்டு விழா மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (29.04.2023) ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி, கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பணிபுரிந்து 2022-23ஆம் கல்வியாண்டில் (ஜூன் 2022 முதல் மே 2023 வரை) பணிநிறைவடைந்த மற்றும் பணி நிறைவு பெறவிருக்கும் உதவி கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 125 நபர்களைப் பாராட்டி மாண்புமிகு மேயர் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த.விசுவநாதன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், உதவிக் கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு

மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்