முன்னதாக பர்மா காலனி பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலை பணியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து புலிக்கொரடு பகுதியில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடம் மற்றும் குன்றுமேடு பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஆகியவற்றை ஆய்வு செய்து, புனரமைப்பு பணியினை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் குன்றுமேடு பகுதியில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியை பார்வையிட்டு, பழுதடைந்துள்ள மின் மோட்டாரை மாற்றியமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். ஆய்வின்போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஆனந்தஜோதி, உதவி பொறியாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.