மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே கடத்தி வரப்பட்ட கடல் அட்டையை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். மயிலாடுதுறை நண்டலார் சோதனை சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் கடல் அட்டைகள் சிக்கின. நாகப்பட்டிணத்தை சேர்ந்த மழலைமாறன் என்பவரிடம் இருந்து 40 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.