மயிலாடுதுறையில் நண்பரின் மதுவை அருந்தியவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மதுவில் பூச்சி மருந்து கலந்து தற்கொலைக்கு முயன்ற நண்பரின் மதுபானத்தை அருந்தியவர் உயிரிழந்தார். பில்லாவிடந்தையைச் சேர்ந்த ஜோதிபாசு (32) என்பவர் தற்கொலை செய்வதற்காக மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துள்ளார். ஜோதிபாசு வீட்டுக்கு வந்த நண்பர் ஜெரால்டு (24) அங்கிருந்த பூச்சி மருந்து கலந்த மதுவை தெரியாமல் குடித்துள்ளார். பூச்சி மருந்து கலந்திருப்பதாக ஜோதிபாசு எச்சரித்தும், அலட்சியப்படுத்திவிட்டு மது அருந்திய ஜெரால்டு உயிரிழந்தார்.

Related posts

ஓய்வை அறிவித்தார் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்!

வைரலோ வைரல்

கொலு பொம்மைகள் பராமரிப்பது எப்படி?