மயிலாடுதுறை தனியார் பேருந்தில் தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 20ம் தேதி அழுந்துறையிலிருந்து மயிலாடுதுறையை நோக்கி சென்ற பேருந்தில் 70 வயதுடைய முதியவர் பயணம் செய்தார். அப்போது அவர் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து சென்ற நிலையில் இறங்குவதற்காக இருக்கையில் இருந்து எழுந்து நின்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக முதியவர் பேருந்திலிருந்து தவறி விழுந்தபோது பேருந்து நடத்துனர் அவரையே காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் பேருந்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த முதியவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முதியவர் யார் என்பது குறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு