மாயனூர் காவிரி கதவணையில் நீரில் மூழ்கிய வாலிபரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு

*சோகத்தில் கிராம மக்கள்

கிருஷ்ணராயபுரம் : மாயனூர் காவிரி கதவணையில் நீரில் மூழ்கிய வாலிபரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர், பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (21). இவர், தனது நண்பர்களுடன் ஆடி 18 ஐ முன்னிட்டு மாயனூர் காவிரி கதவணை பகுதியின் தென்கரை மேட்டு வாய்க்கால் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி குளிக்க சென்றுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் வருவதால் கதவணை கடல் போல் காட்சியளிக்கும் நிலையில் தண்ணீரின் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கினார்.

தகவல் அறிந்த மாயனூர் போலீசார் மற்றும் கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் நேற்றுமுன்தினம் மாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 7 மணி அளவில் தேடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்தினர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி முதல் மீண்டும் தீயணைப்பு நிலைய வீரர்கள் நீரில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டர். மாலை 5.30 மணி அளவில் தென்கரை மேட்டு வாய்க்காலில் சண்முகம் சடலமாக மீட்கப்பட்டார்.

தேடுதல் பணியை கலெக்டர் தங்கவேல், டிஆர்ஓ. கண்ணன், சப் கலெக்டர் இளங்கோவன், குளித்தலை ஆர்டிஓ. தனலட்சுமி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், மாயனூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் கோமதி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். நீரில் மூழ்கிய வாலிபரை இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Related posts

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்

சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா?.. 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு