பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டியில், ‘‘இந்த இயக்கத்தை காணாமல் போய்விடும் என கூறுபவர்கள் தான் காணாமல் போய் விடுவார்கள்; கானல்நீராக மறைந்து விடுவார்கள். இந்த இயக்கத்தை வீழ்த்த கூடிய சக்தி இனி ஒருவர் பிறந்து வந்தால் கூட முடியாது. தமிழகத்தில் பாஜ பலவீனமாக இருப்பதால் தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து கொண்டு இருக்கிறார். அவர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அவர்களின் வெற்றி இலக்கம் பூஜ்ஜியமாகத்தான் அமையும். 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்கு சதவீதத்தை பெரும் என நம்பிக்கை உள்ளது என்றார்.