மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

சென்னை: சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், மக்கள் முதல்வரின் மனித நேய திருவிழா பொதுக்கூட்டம் கொரட்டூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பகுதி செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். இதில், டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டியில், ‘‘இந்த இயக்கத்தை காணாமல் போய்விடும் என கூறுபவர்கள் தான் காணாமல் போய் விடுவார்கள்; கானல்நீராக மறைந்து விடுவார்கள். இந்த இயக்கத்தை வீழ்த்த கூடிய சக்தி இனி ஒருவர் பிறந்து வந்தால் கூட முடியாது. தமிழகத்தில் பாஜ பலவீனமாக இருப்பதால் தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து கொண்டு இருக்கிறார். அவர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அவர்களின் வெற்றி இலக்கம் பூஜ்ஜியமாகத்தான் அமையும். 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்கு சதவீதத்தை பெரும் என நம்பிக்கை உள்ளது என்றார்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது