சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு; எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சட்ட விதி என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கிறேன்ஒரு சின்னத்தில் வெற்றி பெற்றவர் சின்னம் மாறி போனால் அதன்படி சட்டப்படி பதவியில் இருந்து நீக்கலாம். விதிப்படி, சட்டப்படி முழுமையாக யாருடைய மனம் நோகாமலும் உரிமையை பறிக்காமலும் அவை நடைபெறுகிறது என விளக்கம் அளித்தார்.