ஆனால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் கேசவ விநாயகம் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிசிஐடி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது.
இதில் கேசவ விநாயகத்திடம் விசாரணை நடத்த எந்தவித தடையும் இல்லை. இருப்பினும் புதிய சம்மனை ஒரு வாரத்தில் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம். மேலும் இந்த விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்தனர்.