இதுதொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று இந்து தரப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மசூதி வளாகத்தில் இந்து கோயில்களின் தாமரை வடிவ தூண் உள்ளது. இந்து தெய்வமான ஷேஷ்நாக படமும் அங்குள்ளது. தூணின் அடிப்பகுதியில் இந்து மத சின்னங்கள், வேலைப்பாடுகள் காணப்படுகின்றன” என்று தெரிவித்தார். இதையடுத்து ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை நீதிமன்ற கண்காணிப்பில் ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.