27ம் தேதி முதல் முதுநிலை கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 85,237 பேர் சேர்ந்துள்ளனர். 85% மாணவர் சேர்க்கை நடந்துள்ள நிலையில் இன்னும் நாட்கள் உள்ளதால் 100% சேர்க்கை நடைபெறும். முதுகலை கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஆக.13ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஆக.19ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆகஸ்ட் 28ம் தேதி முதுகலை மாணவர்களுக்கு முதல் வகுப்புகள் தொடங்கப்படும். சென்னை பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி அறிவிக்கப்படும்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை..!!

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்!